Temple Image

🛕 திருக்கோவில் வரலாறு

வடக்கே அலகாபாத்தில் கங்கை, யமுனை அந்தர் வாஹினியாக சரஸ்வதி நதி என்ற மூன்று மஹா புன்னிய நதிகள் சேறும் இடம் திருவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது இது இந்து மதத்தினர்க்கு மிகவும் புனிதமான புண்ய ஷேத்திரம் ஆகும்.‌ நீத்தார்களையும் பித்ருக்களையும் கரையேற்றும் இடமாகும் அதுபோன்ற மகத்துவமான பவித்ரமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புண்ய ஷேத்திரம். தக்ஷூண ப்ராக்ஸி என்றும் சொல்லப்படுகிறது. சாஸ்திரங்களில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஷேத்திரம் திருநெல்வேலிக்கு கிழக்கே 17 கி.மீ தூரத்தில் தாமிரபரணியின் வடகரையில் இருக்கிறது இங்கு ஜீவநதியான தாமிரபரணியுடன் சித்ரா நதியும் கண்ணுக்குத் தெரியாமல் இணையும் கோதண்டராம நதியும் இணைந்து தென்னகத்தின் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.இம்மூன்று நதிகளும் சந்திக்கும் இடத்தை திருமுக்கூடல் என்று கூறுவர் இதன் மகத்துவத்தை முக்கூடற்பள்ளு என்ற சங்க இலக்கியத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது இப்பெயர் பெற்ற ஊரில் வாழ்ந்தவர் வாலகுரு சன்னியாசி கோனார் இவரது இயற்பெயர் மாசானக்கோனார் இவர் தனது சிறு வயதில் ( 12 வயது ) தனது குலத்தொழிலான ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தார். ஒரு வறட்சியான சமயத்தில் தனது ஆடுகளை முக்கூடலுக்கு அருகில் இவர் மேய்த்துக்கொண்டிருந்தார் ஆட்டுக்குட்டிகளுக்கு கூட தாய் ஆடுகளிடம் பால் இல்லாமல் பசியால் தவித்து வந்த அந்த நேரத்தில் சுவாமி சுடலை சந்நியாசி வேடத்தில் திருவோட்டுடன் மாசானக்கோனார் முன் தோன்றினார் மாசானக்கோனார் சந்நியாசி வேடத்தில் இருக்கும் சுடலையிடம் என்ன வேண்டும் என்று கேட்டதற்கு தனக்கு அதிகமாக பசிப்பாதகவும் பசியை தீர்க்க ஒரு மலட்டு ஆட்டை சுட்டிக்காட்டி அதனிடம் இருந்து பால் சுரந்து தரும்படி கேட்டார்.இதைகண்ட மாசானக்கோனார் தயக்கமாக இது மலட்டு ஆடு என்று சந்நியாசிக்கு சொல்ல அவரோ தனது திருவோட்டை கொடுத்து சுரந்து கொடுக்கச் சொன்னார் திருவோட்டை வாங்கி மலட்டு ஆட்டின் மடுவின் கீழ் வைக்கிறார். மடுவில் இருந்து தானாகவே பால் சுரக்க ஆரம்பிக்கிறது.இதை கண்ட மாசானக்கோனார் ஆச்சர்யமடைகிறார் பாலை அருந்திவிட்டு சுவாமி தன் தோற்றமான சுடலை வடிவில் இருந்து காட்சி அளிக்கிறார். இதை கண்டு மாசானக்கோனார் சுவாமியை வணங்குகிறார். சுவாமி மாசானக்கோனாரிடம் நீ என்னை கோவில் வைத்து வழிபடு நான் உன் வம்சத்தையும், ஊர் பொது மக்களையும் காத்து அருள் பாலிக்கிறேன் என்று சுவாமி கூறுகிறார். அதற்கு மாசானக்கோனார் நான்‌ உன்னை‌ கோவில் வைத்து வழிபட்டால் எனக்கு ஒரு வரம் வேண்டும் என்று கேட்கிறார் சுவாமியோ அதற்கு கேள் என்கிறார்.

பிறக்கும் பிறக்கும் பிள்ளைகளுக்கும் கறக்கும் கறக்கும் கன்றுக்கும் எந்த நோய் நொடியில்லாமல், மண்டையில் பத்து பூசாமல் பாதுகாத்து கொடுக்க வேண்டும் என்கிறார்...

இதற்க்கு அடையாளமாக மாசானக்கோனாரின் நாக்கில் 'அ என்ற அச்சாரத்தை சுவாமி சுடலை எழுதினார். அதன் பின் மாசானக்கோனார் முறையான வழிபாட்டு முறைகளை கற்பதற்காக வந்திராயியிருப்பு அருகே சதுரகிரி என்ற சுந்திரமகாலிங்கம் என்னும் இடத்தில் தவம் செய்யும் கோரக்கர் சித்தரின் சீடரான சுந்திர மூர்த்தி முனிவருக்கு சேவை செய்யும் சீடராக பணியாற்றுகிறார். 12 ஆண்டுகள் செய்த தவத்தை முடித்து காசிக்கு அந்த முனிவர் செல்லும் போது மாசானக்கோனாரிடம் நீ உன் இடத்திற்கு ( சீவலப்பேரி) சென்று உன் பகவான் சுடலைக்கு பூஜை செய்வாயாக என்று கூறி மாசானக்கோனாருக்கு வாலகுரு என்ற பெயரை சுட்டி தனது பயணத்தை தொடர்ந்தார். 24 வயது பாலகனாக மாசானக்கோனார் தனது ஊரான சீவலப்பேரிக்கு நீள சடை முடியுடன் சன்னியாசி வடிவத்தில் வருகிறார் இதை கண்ட ஊர் மக்கள் சன்னியாசி என அழைக்கின்றனர். அன்று முதல் மாசானக்கோனார் என்ற அவர் பெயர் மருவி வாலகுரு சன்னியாசி என்று விளங்குகிறது. முக்கூடலில் சுவாமி சுடலை காட்சி அளித்த இடத்தை காண்கிறார் அந்த இடத்தில் கோவில் கட்டி அதற்கு பூஜை முறைகளை செய்து வணங்கி வழிபட்டு வாழ்த்திருக்கிறார். இது 600 ஆண்டுகளுக்கு முன் நடந்து இருக்கிறது. இன்றும் இந்த சுயம்புலிங்கம் சுவாமி பீடத்திற்க்கு கீழ் இருக்கிறது. சத்தியவாக்கு பெற்ற வாலகுரு சன்னியாசி கோனாருக்கு கோவில் கட்டி தெய்வமாக வணங்கி வழிபட்டு வருகிறோம்....

📞 தொடர்புக்கு

📍 முகவரி

திரு.பாலன் கோவில் பூசாரி, ஶ்ரீ சுடலைமாடசுவாமி திருக்கோவில் சீவலப்பேரி, திருநெல்வேலி - 627351

📞 தொலைபேசி

+91 98436 55808

💬 வாட்ஸ்அப்

+91 88385 41864

🖼️ காட்சிகள்

Gallery Image 1
Gallery Image 2
Gallery Image 3
Gallery Image 4
Gallery Image 5
Gallery Image 6
Gallery Image 7
Gallery Image 8
Gallery Image 9
Gallery Image 10
Gallery Image 11
Gallery Image 12

🎥 காணொளி காட்சிகள்